யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தால் போராட்டம் முன்னெடுப்பு.

நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்களால் நாடுதழுவியரீதியில் இன்றையதினம் ஒருநாள் வேலை நிறுத்தபோராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்க கூட்டுக்குழுவானது பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்களும் அதில் இணைந்து கொள்வதென்ற தீர்மானத்தை மேற்கொண்ட நிலையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலுமுள்ள கல்விசாரா ஊழியர்கள் தற்போது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொருளாதார கொள்கையை மக்கள் மயப்படுத்து, காணமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வழங்கு, மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளி, நாட்டை கொள்ளையடிக்காதே, கோட்டா கோ கோம் போன்ற சுலோகங்களை தாங்கிய அட்டைகளை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக் தெரிவித்த ஆசிரியர் சங்க பிரதிநிதி,

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என இப்போது போராட்டங்கள் இடம்பெற்று வருகிறது.அதற்கு நாம் ஆதரவு கொடுக்கின்றோம்.ஆனாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரையில் இந்த பிரச்சனை தீராது.நாட்டின் பாதுகாப்புக்கு என்று பல மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படுகின்றனஇவை எங்கே எதற்கு செல்கின்றன என்று தெரியவில்லை.ஆகவே அதற்கு பெருமளவு நிதி ஒத்துக்காமல் மக்களுக்கும்,அபிவிருத்திக்கும் ஒதுக்க வேண்டும்.தமிழ் மக்களின் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.எங்களுக்காகவும் சிங்கள மக்கள் போராட வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *