
கொழும்பு, ஏப் 28
நாட்டில் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக என்னால் சீஸ் சாப்பிடமுடியாமல் உள்ளது என சிறுவன் ஒருவன் தெரிவிப்பதாக யுனிசெவ் வெளியிட்டுள்ள
டுவிட்டர் பதிவு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளனன. நான் வாரத்திற்கு ஒரு முறை சீஸ் சாப்பிடுவேன் அது எனது பிடித்தமான உணவு ஆனால் எனது பெற்றோரால் அதனை வாங்க முடியாததன் காரணமாக என்னால் சீஸ் உண்ணமுடியவில்லை-இலங்கையில் அதன் விலை அதிகம் என 15 வயது சிறுவன் தெரிவிக்கும் பதிவினை யுனிசெவ் வெளியிட்டுள்ளது.
இந்த பதிவிற்கும் இலங்கை மக்கள் தற்போது எதிர்கொள்ளும் யதார்த்தத்திற்கும் வெகுதூரம் பலரால் பாணை கூட பெறமுடியாத நிலை காணப்படுகின்றது -என விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.