ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

கொழும்பு, ஏப் 28

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை உருவாக்கியுள்ளார்.

அடுத்த நாடாளுமன்ற அமர்வில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பிக்கப்படும்.
ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதிக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ளது. ஏனைய எதிர்கட்சியினரிடமிருந்தும் கையெழுத்துக்களை பெறுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றினாலும் அவரை பதவி நீக்க முடியாது எனினும் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் நம்பிக்கை இழந்துள்ளதை இதன் மூலம் வெளிப்படுத்தலாம்.

இது ஜனாதிபதி பதவி விலகுவதற்கான அழுத்தங்களை மேலும் அதிகரிக்கும்
ஜனாதிபதி பதவி விலகினால் தகுதி வாய்ந்த புதியவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என அரசியல்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களை பெறுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *