சுற்றாடல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் நேற்றையதினம் ஜப்பானியத் தூதுவவர் மிசுகோஷி ஹிடேகிஅமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், புதுப்பிக்கத்தக்க வலுவை, சுற்றாடல்துறையில் பயன்படுத்துவது குறித்த ஆலோசனைகள் குறித்தும் அமைச்சர் அளவளாவினார்.
இச்சந்திப்பில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் Dr. அனில் ஜேசிங்க மற்றும் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



