
பெருந்தோட்டத் தொழிலாளர்களும் இன்றைய போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.
இதன்படி, ஹட்டன், டிக்கோயா, பொகவந்தலாவை, பதுளை, ஹப்புத்தளை, வெலிமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இதனிடையே, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களும் கடைகள் மூடப்பட்டு தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நுவரெலியா, ஹட்டன், தலவாக்கலை, கொட்டகலை, நோர்வூட், பொகவந்தலாவை மற்றும் மஸ்கெலியா ஆகிய பகுதிகள் இவ்வாறு கடைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.