
கொழும்பு, ஏப் 28
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொருத்தமான இடங்களை தெரிவு செய்து கடலட்டை வளர்ப்பு, பாசி வளர்ப்பு, இறால் வளர்ப்பு உட்பட்ட நீர்வேளாண்மை செயற்பாடுகளை தனியார் முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புடன் விஸ்தரிப்பற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பல்வேறு தனியார் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற இக்கலந்துரையாடல்களில், கற்பிட்டி, மன்னார், தீவகம் மற்றும் வடமாராட்சி பிரதேசங்களில் நீர்வேளாண்மை தொழில் முயற்சியில் ஈடுபடுவதற்கு ஆர்வம் செலுத்துகின்ற தொழில் முயற்சியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டு தாங்கள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்புக்களில் தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் வடக்கு மாகாண பணிப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.