இந்தியாவில் ஃபைசர், மொடர்னா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வருமா?

இந்தியாவிலேயே குறைந்த செலவில், இருப்பு வைக்கக்கூடிய தடுப்பூசிகளின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் திட்டம் இல்லை என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும் உரிய சட்டப்பூர்வ வழிமுறைகளை பின்பற்றி தனியார் அமைப்புகள் இந்த தடுப்பூசிகளை கொள்வனவு செய்யலாம் எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் அரசுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், ஃபைசர் இந்தியா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மொடர்னா தடுப்பூசியை சேமித்து வைப்பத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையின் காரணமாக இந்த தடுப்பூசிகளும் இதுவரை சந்தைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *