முல்லைத்தீவு தாதியர் மருத்துவ சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு!

முல்லைத்தீவு மாவட்ட தாதியர் மருத்துவ சங்கத்தினர் இன்று புதன்கிழமை 22.09.21 நண்பகல் அரை மணிநேர பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தி உள்ளார்கள்.

நாடளாவிய ரீதியில் தாதியர் சங்கத்தினர் இணைந்த புறக்கணிப்பினை இன்று மேற்கொண்டுள்ளார்கள்.

மேலும், 44 தொழில் சங்கங்களும் இணைந்து தொழில் சங்க புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதோடு, 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள்.

அதன்படி, கொரோனா காலத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் இந்த காலத்தில் மேலதிக நேர விசேட தின கொடுப்பனவினை கட்டுப்பாடு இன்றி வழங்குதல் சுகாதார ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்புதல் போன்ற கோரிக்கையினை முன்வைத்து பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதேவேளை, இது நிறைவு பெறாத பட்சத்தில் மீண்டும் 27 ஆம் திகதி 5 மணிநேரம் பணியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *