மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறுமண்வெளியில் உள்ள வாவியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்க்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், பாவித்த ஊன்றுகோல் ஒன்றும், டோச் லைட் ஒன்றும் ஆற்றங்கரை ஓரமாக கிடந்த நிலையில் மட்டக்களப்பு தடயவியல் பொலிஸாரால் மீட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த 68 வயதுடைய நபர், குறுமண்வெளி பழைய தபாலக வீதியைச் சேர்ந்த குமாரய்யா கோபாலசாமி என அடையாளம் காணப்பட்டுள்ளமையுடன், இவர் நேற்று இரவு 11 மணிவரை வீட்டிலிருந்ததாகவும் அதன்பின்னர் காணாமல் போயுள்ளதாகவும், அவரது உறவினர்கள் களுவாஞ்சிகுடி பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

மேலும், சடலத்தைப் பார்வையிட்ட திடீர் மரணவிசாரணை அதிகாரி சடலத்தை பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டமையுடன், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *