நாட்டில் அடுத்தடுத்து மீட்கப்படும் கைக்குண்டுகள்!

நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் குப்பைத் தொட்டியில் இருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இக் குப்பைத் தொட்டியிலிருந்து கழிவுகளை அகற்றும் சந்தர்ப்பத்தில் நகர சபை பணியாளர் ஒருவரால் இந்தக் கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும், அக் கைக்குண்டுகள் குப்பைத் தொட்டியில் எவ்வாறு வந்தது என்பது தொடர்பாக இன்னும் உரிய தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இதுதொடர்பில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *