மீண்டும் ஆட்சி அமைக்க ஒன்று சேருங்கள்-நாமல் அழைப்பு.

நாட்டில் தற்போது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மறுபுறத்தில் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை ஆளும் தரப்பும் தமக்கான ஆதரவை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் பல்வேறு தரப்பினருடன் தொடர் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் கடந்த சில நாட்களாக இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதேவேளை முன்னாள் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,

இடைக்கால அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க குறிப்பிட்ட காலத்திற்கு அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து முக்கிய கட்சிகளும் ஒன்றிணைந்து பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும்.
பொதுஜன கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க ஒன்று சேருங்கள் ஏற்கனவே இருக்கும் கூட்டணியை நீடிக்கத்தான் செய்யும்! என்றவாறு பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *