மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் சாவு!

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் சாவு!

அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேரின்பநாதன் கேசவன் (வயது – 27) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சிறிய வர்த்தக நிலையம் ஒன்றை நடாத்திவந்த நிலையில் குறித்த கடையில் ஏற்பட்ட மின்னொழுக்கில் சிக்கியுள்ளார். உடனடியாக அக்கராயன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் எனினும், சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அக்கராயன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *