புத்தளம் வண்ணாத்திவில்லு சேரக்குலிய பகுதியில் நேற்று மாலை ஓலைக் குடிசை தீப்பற்றிய நிலையில் குடிசையில் இருந்த சுகயீனமுற்ற ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் பீடி புகைப்பதற்கு அங்கவீனமுற்ற பிள்ளையிடம் தீ மூட்டுமாறு கூறி பின்னர் தீக்குச்சியை வீசிய பொழுது குடிசையில் தீப்பற்றி எரிந்தததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று முற்பகல் புத்தளம் நீதிமன்ற நீதவான் அசேல சில்வா குறித்த இடத்திற்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
உயிரிழந்த நபர் 97 வயதுடைய 12 பிள்ளைகளின் தந்தையென பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பீ.சி. ஆர் பரிசோதனையின் பின்னரே உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


