இந்தோனேஷியா அரசினால் இலங்கைக்கு 550 மில்லியன் ரூபா (1.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இன்றையதினம் முதற்கட்ட நன்கொடையாக இன்றையதினம் வழங்கப்பட்டன.
மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இந்தோனேஷியா தூதுவரால் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இன்றையதினம் 1,284 கிலோ (1.2 தொன்) வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு தொகுதி மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மே 8 ஆம் திகதி இலங்கைக்கு உலக சுகாதார நிறுவனம் ஊடாக கொண்டுவரப்படவுள்ளது.


