உரப்பிரச்சனைக்கு தீர்வு வழங்கக் கோரி விவசாய அமைச்சர் சத்தியாக்கிரக போராட்டம்.

விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ஜனக வக்கும்புர மற்றும் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார ஆகியோர் இன்று பத்தரமுல்ல தியத உயனவுக்கு முன்பாக சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சரிடம் தூதுக்குழுவினர் செய்தியொன்றை தெரிவித்துள்ளனர்.

இதன்படி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் விவசாயிகளுக்கு தேவையான இரசாயன உரங்களை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பயிர் சேதத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

குறிப்பாணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஏனைய கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு மூன்று நாட்களுக்குள் அவகாசம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்த்து, பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்ததற்காகவும், போராட்ட இடத்திற்கு வந்து தங்களது கோரிக்கைகளை உன்னிப்பாக கவனித்ததற்காகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

எதிர்கால கலந்துரையாடல்களில் தாங்கள் பங்குபற்றவுள்ளதாகவும் அந்த குழுவினர் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *