
இன்றைய காலத்தில் மொபைல் போன் மக்களிடத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறது.வீட்டில் இருக்கும் போதும் வெளியில் செல்லும் போதும் அனைவரும் புகைப்படம் எடுக்க ஆசைப்படுகின்றனர்.
மிக உயரத்தில் புகைப்படம் எடுப்பது ஆபத்தான இடடங்களில் புகைப்படம் எடுப்பது என மக்கள் தங்கள் நிலையை மறந்துவிடுகிறார்கள்.
இமாச்சல பிரதேசத்தில் குலு மாவட்டம் பஹாங் என்ற இடத்தில் ஓடும் ஆற்றக்கரையோரம் நின்று அம்மா, மகன் மற்றும் இரு சுற்றுலாப் பயணிகள் என நான்கு பேர் செல்பி எடுத்துள்ளனர்.
அப்போது தவறுதலாக தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது.




