அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் உள்ள சிரமம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்கள் துறைமுகத்தில் சிக்கியிருப்பதாகவும் அந்த உணவுப் பொருட்களை விரைவில் வெளியில் எடுத்தால் தான் அடுத்த மாதங்களுக்கு போதுமான உணவினை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவர்ட் கப்ரால் நியமிக்கப்பட்டதால் ,
விரைவில் தீர்வு கிடைக்கும் என அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கு தீர்வு கிடைக்காவிடில் அனைத்து இறக்குமதிகளும் நிறுத்தப்படும் எனவும் நாட்டில் தற்போது இருக்கும் அத்தியாவசிய உணவு பொருட்கள் ஒக்டோபர் இறுதி வரை மட்டுமே கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *