கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண்களை மடக்கி பிடித்த பொலிஸ்

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி பகுதியில் வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று இன்று அதிகாலை முற்றுகையிடப்பட்டமையுடன் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இவ் முற்றுகையின் போது 15,000 மில்லிலீற்றர் கசிப்பு, 140,000 மில்லி லீற்றர் கோடா என்பன மீட்கப்பட்டுள்ளன.

இந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்திய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட பொருட்களையும் கைது செய்யப்பட்டவர்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *