மருத்துவ ஆலோசனை தேவைப்படுபவர்களுக்கு விசேட இலக்கம் அறிமுகம்

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு, மருத்துவ ஆலோசனை தேவைப்படுபவர்கள் தொடர்புகொள்ள விசேட இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, எந்த நேரத்திலும் 247 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைத்து மருத்துவர் ஒருவரை தொடர்புகொள்ளலாம் என கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் இந்திக கருணாதிலக தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மருத்துவரை தொடர்புகொண்டதன் பின்னர், நோயாளியின் நோய் நிலைக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *