மட்டக்களப்பில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் இளம் வயதினர்!

மட்டக்களப்பு மாவட்டத்தில்  20வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுவரும் நிலையில் பெருமளவான இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளை ஏற்றிவருகின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகளில்  இன்று (வியாழக்கிழமை) தினம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு கூழாவடி விக்னேஸ்வரா திருத்தொண்டர் மண்டபத்தில் இன்றைய தினம் 20வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரனின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கிரிசுதனின் தலைமையில் நடாத்தப்பட்டது.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயம்,மட்டக்கள்பபு இந்துக்கல்லூரி,கல்லடி சிவானந்தா வித்தியாலயம் ஆகிய பகுதிகளிலும் 20வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

பெருமளவான இளைஞர் யுவதிகள் இன்றைய தினம் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதற்கு ஆர்வத்துடன் கலந்துகொண்டதை காணமுடிந்தது.

அத்தோடு இதுவரையில் எந்த தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாத மற்றும் இரண்டாம் தடுப்பூசியைப்பெற்றுக்கொள்ளாத 30வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *