தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் திலீபனின் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்படுகையில் இன்று வியாழக்கிழமை மதியம் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மேலும், அவருடன் இணைந்திருந்த 2 தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடைய உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.