பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து நிபுணர் குழுவை அமைக்க நடவடிக்கை!

பெகாசஸ் உளவு குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்க உச்சநீதிமன்றம் நிபுணர் குழுவொன்றை நியமிக்கும் என தலைமை நீதிபதி என்வி ரமணா தெரிவித்துள்ளார்.

இது குறித்த இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விசாரணையில் விரிவான உத்தரவு அடுத்த வாரம் பிறப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபுணர் குழுவில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பதை அடுத்த வாரம் தான் தீர்மானிக்க முடியும் எனவும் நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.

மேலும் பெகாசஸ் உளவு விவகாரத்தில் அரசுக்கு எந்த பங்கும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான உறுதி மொழி பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *