பொலித்தீன் உற்பத்திகள் தொடர்பில் விசேட சுற்றிவளைப்பு

தடை செய்யப்பட்டுள்ள பொலித்தீன் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறியும் விசேட சுற்றிவளைப்புகளை முன்னெடுக்கவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் நாயகம் பீ.பி ஹேமந்த ஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 20 மில்லிமீற்றர் அல்லது 20 கிராமுக்கும் குறைவான நிறையுடைய செசே பைக்கற்றுக்கள் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் தடை செய்யப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், தொடர்ந்தும் அவ்வாறான தடைசெய்யப்பட்ட பொலித்தீன் உற்பத்திகளில் சில நிறுவனங்கள் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, கெஸ்பேவ – ஜம்புரெலிய பகுதியில் நேற்றைய தினம் (22) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் தடை செய்யப்பட்ட 3 ஆயிரம் செசே பைக்கற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள தடை செய்யப்பட்டுள்ள செசே பைக்கற்றுக்கள் இருப்பின் அதனை உடனடியாக அகற்றுமாறும் மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *