அரிய வகை ஆந்தைகள் உயிருடன் மீட்பு

புத்தளம் பகுதியில் உரிமையாளர் ஒருவரின் அலுவலகத்தில் இன்று கூரையின் மேலிருந்து கீழே வீழ்ந்த மூன்று ஆந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு புத்தளம் வனஜீவராசிகள் தீணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த ஆந்தைகள் (Barn Owl) என அழைக்கப்படும் அரிய வகையைச் சார்ந்ததென வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ் ஆந்தைகள் நிகாவரெட்டிய மிருக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *