வத்தளை – மாபோல நகரசபை செயலாளர் மீது கழிவு எண்ணெய் வீச்சு

வத்தளை மாபோல நகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டத்தின் போது நகர சபை செயலாளர் மீது கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது.

கூட்ட மண்டபத்தின் பின்னாலிருந்து நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவர் கழிவு எண்ணெய் வீசினார்.

வத்தளை மாபொல நகர சபையின் இம்மாத பொதுக்கூட்டம் நேற்று (28) வத்தளை மாநகர சபையின் தலைவர் மார்க் குணசேகர (ஐ.தே.க) தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, பெரும் குழப்பம் ஏற்பட்டு, ஒரு பகுதி உறுப்பினர்கள் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மண்டபத்திற்குள் நுழைந்த இனம்தெரியாத நபர் கழிவு எண்ணெய் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான செயலாளர் வத்தளை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்படுவதற்கு இடமளிக்காத காரணத்தினால் தான் நகர சபையின் சில உறுப்பினர்களினால் இவ்வாறான தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் சட்டத்திற்கு அமைவாக செயற்படுவேன் எனவும் செயலாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *