இலங்கையின் பொருளாதாரம் மோசமான நிலையை எதிர்கொண்டுவருவதாகவும், இதன் இறுதி விளைவு எதிர்வரும் மாதங்களில் இன்னும் மோசமாக இருக்கும் எனவும் முன்னாள் பிரதமரும் ஐ.தே.க தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று (28) விசேட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
டொலர் பற்றாக்குறை, வருமானம் குறைதல், செலவுகள் அதிகரிப்பு மற்றும் தாங்க முடியாத கடன் சுமை என்பனவே பிரதான பிரச்சினைகளாகும் எனத் தெரிவித்த விக்கிரமசிங்க, இந்த விடயங்கள் அனைத்தும் சில காலமாக தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபைக்கு 100 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த வருடம் 100 பில்லியன் ரூபா நட்டத்தை சந்திக்கும் என தெரிவித்த இலங்கை மின்சார சபைக்கு ஒரு அலகுக்கு 17 ரூபா கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் செலவு ரூ.53,என அவர் மேலும் தெரிவித்தார்.