
கொழும்பு, ஏப் 19
அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து முக்கிய கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு ஒன்றிணையுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.