2021ஆம் ஆண்டு வேல்ஸில் 8 சதவீதம் குற்றங்கள் அதிகரிப்பு!

2021ஆம் ஆண்டு வேல்ஸில் பதிவுசெய்யப்பட்ட குற்றங்கள் 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக, தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட வருடாந்திர புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேல்ஸ் படைகளால் மொத்தம் 256,945 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டு 237,940 குற்றங்களாக பதிவாகியிருந்தன.

மோசடி மற்றும் கணினி துஷ்பிரயோக குற்றங்களைத் தவிர்த்துள்ள உட்துறை அலுவலக புள்ளிவிபரங்கள்,
பாதிக்கப்பட்டவரை நேரில் பின்தொடர்வது அல்லது அவர்களைக் கண்காணிப்பது போன்ற குற்றங்கள் 20 சதவீதமும் பாலியல் குற்றங்கள் 18 சதவீதமும் அதிகரித்துள்ளது. மேலும், மோசடி மற்றும் கணினி துஷ்பிரயோக குற்றங்கள் 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

டைஃபெட்-போவிஸ் பொலிஸ்துறை, இந்த குற்றங்களில் 49 சதவீத முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் 14 சதவீத சராசரி உயர்வு ஆகும்.

கொவிட்-19 தொற்றுநோயை உள்ளடக்கிய ஆண்டில், திருட்டு குற்றங்களில் 6 சதவீத வீழ்ச்சியும், திருட்டுகளில் 11 சதவீத வீழ்ச்சியும் காணப்பட்டது.

ஆனால் புள்ளிவிபரங்கள் டைஃபெட்-போவிஸில் பதிவுசெய்யப்பட்ட குற்றங்களில் 27 சதவீத உயர்வைக் காட்டுகின்றன. இதில் வன்முறைக் குற்றங்களில் 38 சதவீதம் அதிகரிப்பு மற்றும் வடக்கு வேல்ஸில் 13 சதவீதம் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *