திரிபோஷா உற்பத்தி 3 மாதங்கள் இடைநிறுத்தம்

மூலப்பொருள்கள் பற்றாக்குறையால் திரிபோஷா மா உற்பத்தி 3 மாதங்கள் இடைநிறுத்தப்படுகிறது என லங்கா திரிபோஷா நிறுவனம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் சுகாதார மருத்துவ அதிகாரிகள் அலுவலகங்களால் திரிபோஷா விநியோகம் இடம்பெறுவதில்லை.

இதனால் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் ஏற்படுகிறன.

அத்துடன் முதல் சில மாதங்களில் மட்டுமே கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா வழங்கப்படுகிறது என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் இது குறித்து லங்கா திரிபோஷா நிறுவனத்திடம் வினவியபோது,

மூலப்பொருள்களின் பற்றாக்குறையால் திரிபோஷா உற்பத்தி 3 மாதங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளது என நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *