இலங்கைக்கு உதவி: தமிழக சட்டப்பேரவையில் ஸ்டாலினின் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை, ஏப் 29

இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு இந்திய மத்திய அரசிடம் அனுமதிகோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டபேரவையில் முன்வைக்கப்பட்ட தனிநபர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை முன்வைத்து உரையாற்றிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக அரசு இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாக தெரிவித்தார்.

அதற்கமைய, ரூ. 80 கோடி பெறுமதியான 40,000 மெட்ரிக் டன் அரிசி, 137 மருந்து பொருட்கள் (ரூ.28 கோடி ) மற்றும் குழந்தைகளுக்காக 500 டன் பால்மா (ரூ.15 கோடி) என்பவற்றை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

இவற்றை தமிழக மாநில அரசினால் நேரடியாக வழங்க முடியாது என்பதால், இலங்கையில் உள்ள இந்தியா தூதரகம் ஊடாக வழங்கிவைக்க இந்திய மத்திய அரச அனுமதி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கை மக்களுக்கு உதவி செய்வதற்காக தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சியின் துணைத்தலைவர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மனித நேயத்திற்கு அடையாளமாக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது தமிழக முதலமைச்சரின் தனித்தீர்மானத்தின் விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், தனது தீர்மானத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்  தற்போது, தாம் வழங்க முன்வந்திருப்பது முதற்கட்ட உதவி என்றும், தேவையேற்படின், அடுத்தகட்டமாக உதவுவதற்கும் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *