கைதான கஜேந்திரன் உள்ளிட்டோருக்கு பிணை

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நல்லூர் பின் வீதியில் அஞ்சலி செலுத்த முற்பட்ட நிலையிலையே அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பின்னர், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர , அவர்களை பொலிஸ் பிணையில் யாழ்ப்பாண பொலிஸார் விடுவித்துள்ளனர்.

அத்துடன், அவர்களுக்கு எதிராக எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் இன்றைய தினம் அஞ்சலி செலுத்த சென்ற போது, அதற்கு பொலிஸார் தடை விதித்தனர்.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தடைகளை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை அவரையும் அவருடன் சென்றவர்களையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *