ஹிந்தி பேச முடியாது என்றால் வெளிநாட்டுக்கு செல்லலாம்: உ.பி. அமைச்சர்

லக்னோ,ஏப் 29

உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணி கட்சித் தலைவரும், அம்மாநில அமைச்சருமான  சஞ்சய் நிஷாத் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

இந்தியாவில் இருப்பவர்களுக்கு ஹிந்தி மீது பற்று இருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்கள் வெளிநாட்டவர்களாகவே கருதப்படுவர். உங்களுக்கு ஹிந்தி பேச முடியாதென்றால் நீங்கள் இந்தியாவை விட்டு விட்டு வேறு நாட்டுக்குச் செல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஹிந்தி மொழி குறித்த விவாதம் கடந்த சில நாட்களாக  சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில், ஹிந்தி மொழி குறித்த உத்தர பிரதேச அமைச்சரின் கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *