முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவின் சிலையில் கட்டப்பட்ட கறுப்புத் துணி!

கொழும்பு காலிமுகத்திடலில் இளைஞர், யுவதிகள் கடந்த 21 நாட்களாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, முன்னாள் பிரதமர் S.W.R.D.பண்டாரநாயக்கவின் சிலையில் இன்று கறுப்புத் துணி கட்டப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞன் ஒருவரால், S.W.R.D.பண்டாரநாயக்கவின் கண்களை மூடி கறுப்புத் துணி கட்டப்பட்டுள்ளது.

எந்த அரசியல் கட்சிகளின் ஆதரவும் இன்றி இளைஞர்கள் தன்னெழுச்சியாக இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *