குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்காக உதவி திட்டம்!

இலங்கை மக்களுக்கு சமூக உதவித் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகால தேவைகள் நிதியத்தின் கீழ் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கி ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், உலக வங்கி அதற்காக முழுமையாக இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *