எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து தன்னை நீக்க சதி நடப்பதாக சஜித் தகவல்

கொழும்பு, ஏப் 30

எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து தம்மை நீக்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அச்சுறுத்தல் அழைப்புகள் வந்ததாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள ஏனைய கட்சிகளுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தில் இணைக்கோரி 24 மணி நேரமும் தொலைபேசி அழைப்புகள் வருவதாக அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் இடைக்கால அரசாங்கத்தில் இணையப் போவதில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முடிவு அதுவே என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *