தென் கொரியாவில் கட்டாய முககவசம் நீக்கம்

யோல், ஏப் 30

தென் கொரியாவில் ஒமைக்ரானால் தூண்டப்பட்ட கொரோனா அலை சரிந்து வருகிறது. இதனால் பொது இடங்களில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவு அடுத்த வாரம் முதல் ரத்தாகும் என பிரதமர் கிம் பூ கியும் அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிற பொது நிகழ்ச்சிகளில், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்போர் முககவசம் அணிய வேண்டும், இது கட்டாயம் ஆகும். அங்கு தனி மனித இடைவெளியை பின்பற்றுதல், பொது இடங்களில் கூடுவது தொடர்பான கட்டுப்பாடுகள் கடந்த 18-ந் திகதி முதல் அகற்றப்பட்டு விட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *