
இந்தியா, ஏப் 30
பிரபல பொலிவூட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் நிரந்தர வைப்புத் தொகை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்புடைய பணமோசடி வழக்குக்காக இவ்வாறு அவரது வைப்புத் தொகை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ரூ.72.7 மில்லியன் நிலையான வைப்புத் தொகை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.