அமைச்சரவையில் பலம் வாய்ந்த அமைச்சர் அலி சப்ரியின் கீழ் 83 நிறுவனங்கள்!

நிதி மற்றும் நீதி அமைச்சர் முகமது அலி சப்ரியின் கீழ் 83 துறைகள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

அமைச்சுக்களின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட சமீபத்திய வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்த நிறுவனங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) தற்போதைய 8.5 சதவீதத்தில் இருந்து 13-14 சதவீதமாக நிதி வருவாயை அதிகரிப்பது குறித்து தனது முதல் கட்ட ஆலோசனைகளை நேற்று தொடங்கியுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *