சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட இரு சொகுசு வாகனங்கள் மீட்பு

கொழும்பு, ஏப் 30

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 4 கோடிக்கும் அதிக பெறுமதியான இரு அதிசொகுசு ரக வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரு அதிசொகுசு ரக வாகனங்கள், 5 வாகன உதிரி பாகங்கள் மற்றும் 1000 கிலோ கிராம் மஞ்சள் தூள் உள்ளடங்கிய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு சொகுசு வாகனங்களும் கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவரால் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இலங்கை சுங்க திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *