மட்டக்களப்பில் ஐந்து தொழில்நுட்ப கிராமங்களை நிறுவதற்கு தீர்மானம்

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் மற்றும் மாகாண விவசாய திணைக்களத்தின் வழிகாட்டலில் விவசாய தொழில்நுட்ப மாதிரிக் கிராமங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக இந் தொழில்நுட்ப கிராமங்களை வலுவூட்டுவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து தொழில்நுட்ப கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதன் கீழ் மட்டக்களப்பு ஜெயந்திய கிராமமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அக்கிராம விவசாயிகளுக்கான உபகரணங்கள் விநியோகிக்கும் நிகழ்வு விவசாயப் போதனாசிரியர் எம்.ஐ.எம்.ஜமால்தீன் தலைமையில் ஜெயந்தியாய கிராமத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் கலாநிதி ளுஆ ஹுசைன், மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் ஏ .பேரின்பராஜா , உதவி விவசாயப் பணிப்பாளர் ளு.சித்திரவேல் மற்றும் கல்லிச்சை விவசாய அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *