அருள் பொழியும் ஈகைத் திருநாளில் உலக அமைதிக்கும் தாய் நாட்டின் சுபீட்சத்திற்கும் அனைவரும் பிரார்த்திப்போமாக..! காதர் மஸ்தான்

அருள் பொழியும் ஈகைத் திருநாளில் உலக அமைதிக்கும் தாய் நாட்டின் சுபீட்சத்திற்கும் அனைவரும் பிரார்த்திப்போமாக என கிராமியப் பொருளாதார பயிர்ச் செய்கை மற்றும் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கே. காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

றமழான் பெருநாள் வாழ்த்தினை தெரிவித்து ஊடகங்களுக்கு இன்று (30) அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஈகைத் திருநாளாம் ஈதுல் பித்ரை கொண்டாடும் உலகெங்கும் வாழும் பல கோடி இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு எனது இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதுடன் இப் பெருநாள் தினத்தில் முழு உலக அமைதிக்கும் எமது தாய்நாட்டின் நிம்மதியான வாழ்விற்கும் எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலாவிடம் மனமுருகிப் பிரார்த்திப்போம்.

புனித நோன்பு எம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்றுள்ளது. அது எமக்கு கருணை, விட்டுக்கொடுப்பு என பல பாடங்களை போதித்து சென்றுள்ளது.

இன்று எமது நாடு எதிர்நோக்கியுள்ள அசாதாரண சூழ்நிலையில் நாம் கொண்டுள்ள உயரிய குணவியல்புகள் மூலம் எமது ஒற்றுமை மிக்க தாய்நாட்டை கட்டியெழுப்ப திடசங்கற்பம் பூணுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்வதோடு கண்ணியமிக்க றமழான் மாதத்தில் நாம் எடுத்துக்கொண்ட பயிற்சிகளையும் செய்துவந்த இபாதத்துக்களையும் தொடர்ந்து செய்வதுடன் வசதியற்றிருக்கும் எமது சகோதரர்களை இனங்கண்டு தானதர்மங்களை செய்து இறைவனின் நல்லருளை பெற்ற நல்லடியார்களாக மாறுவோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *