நிதிமோசடி வழக்கில் இலங்கை நடிகை ஜக்குலின் பெர்னாண்டஸின் சொத்துக்கள் (நிலையான வைப்பு 72.7 மில்லியன் இந்திய ரூபாய்) அமலாக்கப்பிரிவால் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவருடன் தொடர்புபட்ட சுகேஷ் சந்திரசேகர் அளித்த பரிசுப்பட்டியல்கள் வெளியாகியுள்ளன.
மருந்து நிறுவனர் மற்றும் தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.215 கோடி பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த ஆண்டு கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், தொழிலதிபரின் மனைவியிடம் பறித்த பணத்தின் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும், பொலிவுட் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து செலவிட்டதும் தெரியவந்தது.
அதிலும் குறிப்பாக பொலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸுடன் சுகேஷ் சந்திரசேகர் நெருக்கமாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
ஜாக்குலினுக்கு ரூ.5.71 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் கொடுத்ததும், ஜாக்குலின் குடும்பத்தினருக்கு 1.70 லட்சம் அமெரிக்க டொலர்களும், 27ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர்கள் வழங்கியதும் தெரியவந்தது.
இந்த வழக்குத் தொடர்பாக நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரணைக்கு அழைத்தனர்.
ஏறக்குறைய 7 மணிநேரம் ஜாக்குலினிடம் அமாலக்கப்பிரிவு விசாரணை நடத்தியதில் சுகேஷிம் தான் பெற்ற பரிசுப் பொருட்கள், பணம், நகைகள் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவித்தார்.
இதையடுத்து ஜாக்குலின் பெர்னான்டஸ் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.7.12 கோடி மதிப்புள்ள வைப்புத் தொகை, ரொக்கம் உள்ளிட்ட ரூ.7.27 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்க அமுலாக்கப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஜாக்குலினுக்கு சுகேஷ் அளித்த பரிசுப் பட்டியல்கள்:
ரூ.9 லட்சத்தில் தலா 3 பெர்சியன் நாட்டு பூனைகள்
ரூ.52 லட்சத்தில் அரேபியக் குதிரை
15 ஜோடி வைரத் தோடுகள்
விலைமதிப்புள்ள சாப்பிடும் தட்டுகள்
கூசி, சனல் நிறுவனத்தின் விலை உயர்ந்த கை பைகள்
கூசி நிறுவனத்தின் ஜிம் ஆடைகள்
லூயிஸ் வியூட்டன் நிறுவனத்தின் இரு விலை உயர்ந்த ஷூக்கள்
மினி கூப்பர் கார்
ரோலக்ஸ் மணிக்கூடு
ஜாக்குலின் சகோதரிக்கு பிஎம்டபிள்யு கார் பரிசு
ஜாக்குலின் தாயாருக்கு போர்ச்சே கார்