
பெய்ஜிங், ஏப் 30
சீனாவின் மத்திய ஹுனான் மாகாணத்தில் 700 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட ஆறு மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் குறைந்தது 39 பேரைக் காணவில்லை என்றும், மேலும் 23 பேர் சிக்கியுள்ளதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சிக்கியுள்ள மற்றும் காயமடைந்தவர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். மேலும் கட்டிட விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும், தற்போது வரையில் இடிபாடுகளில் இருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டதாகவும் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்