
கொழும்பு,ஏப் 30
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பேரணிகள் முன்னெடுக்கப்படுவதால் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, நுகேகொடையில் மற்றும் கொழும்பு நகரில் முன்னெடுக்கப்படும் பேரணிகள், கூட்டங்கள் காரணமாக குறித்த பகுதியில் காவல்துறையினரை சேவையில் ஈடுபடுத்த அதிக கவனம் செலுத்தியுள்ளதுடன், இதற்காக காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.