
மேதினத்தை முன்னிட்டு இன்றையதினம் கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாகாணங்களில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் தொடர்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

