காலி முகத்திடலில் 23 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

கொழும்பு,மே 30

நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு வேண்டி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 23 ஆவது நாளாகவும் முன்னேடுக்கப்படுகின்றது.

சர்வதேச தொழிலாளர் தினமான இன்று தொழிலாளர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி கறுப்புக் கொடியேற்றி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜனநாயகம் மற்றும் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து , காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டாரநாயக்காவின் உருவச்சிலையின் கண்கள் கறுப்பு நிறத்துணியால் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *