மே தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தொழிலாளர்கள் போராட்டங்களுக்கு ஏற்பாடு

கொழும்பு,மே 01

தொழிலாளர் தினத்தை இலக்காக கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி கண்டியில் இருந்து முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி இன்று கொழும்பை வந்தடையவுள்ளது.

மேலும், கொழும்பில் இன்று பாரிய கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இன்றைய மேதினத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பொது கூட்டங்களை நடாத்துவதற்கும் ஏற்பாடு செய்துள்ளன.

அத்துடன், இன்றைய மேதினத்தை கறுப்பு நாளாக அனுஸ்ட்டிக்க பெருந்தோட்ட தொழிலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, வீடுகள் மற்றும் வேலை இடங்களில் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளனர்.

அத்துடன், நாட்டின் பல்வேறு இடங்களில் மேதினத்தை அடையாள போராட்ட நாளாக அனுஸ்ட்டிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்க்பட்டுள்ளன.

இதன்படி, பிரதான நகரங்களில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு மேதினத்தை அடையாள நாளாக காண்பிக்க சனிக்கிழமை இரவு முதல் ஏற்பாடுகள் முன்னெடுக்கபட்டதை அவதானிக்க கூடியாதாக இருந்தது.

இதேவேளை, காலிமுகத்திடலில் முன்னெடுக்க்பட்டுள்ள ஆர்ப்பாட்டமானது இன்று 23 ஆவது நாளாகவும் முன்னெடுக்கபட்டுள்ளது.

இன்றைய தொழிலாளர் தினத்தில் ஆர்ப்பாட்டங்கள் விசேடமாக முன்னெடுக்கபடுமெனவும் தெரிவிக்க்பட்டுள்ளது.

தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.

இதற்கமைய, கொழும்பு மற்றும் நுகேகொடை ஆகிய பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் தின கூட்டங்களினால் ஏற்படவுள்ள போக்குவரத்து நெரிசலினை கட்டுப்படுத்த இந்த விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றைய தினம் பாதுகாப்பு தரப்பினரின் விடுமுறைகள் குறைக்கப்பட்டு கடமையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *