நுகர்வோர் விவகார அதிகாரசபையின் திருத்தச்சட்டம் தொடர்பான வர்த்தமானி வெளியானது!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபையின் திருத்தச்சட்டம்  தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் திருத்தங்கள் இன்றி  அண்மையில்  நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

குறித்த  திருத்தச் சட்டமூலம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 19 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இதற்கமைய, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச்சட்டமூலம்   இரண்டாம் வாசிப்புக்காக கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில்  திருத்தங்களின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *