பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட் தொற்றினால் 36,710பேர் பாதிப்பு- 182பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 36ஆயிரத்து 710பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 182பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 75இலட்சத்து 65ஆயிரத்து 867பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 35ஆயிரத்து 803பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 25ஆயிரத்து 246பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 943பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 61இலட்சத்து நான்காயிரத்து 818பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *