பொலிஸாரின் வீதித் தடைகள் – உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்!

சட்ட கட்டமைப்பிற்கு உட்பட்டு போராட்டம் நடத்தும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொலிஸார் வீதி தடைகளை அமைத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த ஷெனால் ஜயசேகர என்ற நபரால் முன்வைக்கப்பட்ட மனுவில், பொலிஸ்மா அதிபர், கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் போராட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், பொலிஸாரினால் அமைக்கப்பட்ட முட்களுடன் கூடிய வீதித் தடைகள், நிரந்தரத் தடுப்புக்கள், அலரிமாளிகை அருகே நடைபாதையை மூடியுள்ளமையையும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கட்டுப்பாடுகள், ஒன்று கூடும் சுதந்திரம் மற்றும் சித்திரவதைக்கு எதிரான பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து வீதித் தடைகளையும் அகற்ற நீதிமன்ற உத்தரவை மனுதாரர் கோரியுள்ளார்.

மேலும், வீதித் தடைகளை அமைப்பதற்கு முன் உயர் நீதிமன்றத்திடம் அனுமதி பெறுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *